மாலை நேர மழைச்சாரல்


மனதிற்குள் ஒளிந்திருக்கும் உன்னை
வெளியே இழுத்து
வஞ்சனையாக சிரிக்கும்
வழக்கமான மாலை நேர மழைச்சாரல் … !

விரைந்தோடிய வருடங்களை
கணக்கிடும் என்னால்
அதில் நிகழ்ந்த நிகழ்வுகளை
வரையறுக்க முடியவில்லை…!

எனக்கு வரும் துன்பங்களுக்கெல்லாம்
உன் பிரிவை காரணமாய் நினைத்து
வரும் கண்ணீரும் பிடிக்கவில்லை… !

கண்களில் கனவும்,
இதயத்தில் துணிவும்,
இயல்பான வாழ்கையும்
அமைந்தால் போதும்  !
இந்த மழைச்சாரல் எல்லாம்
மறைந்தே போகும் !!!
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

Uvaraj said...

Migavum Nanraaga ullathu :-)

Anonymous said...

Nice lines

Post a Comment