வாழ்கிறேன் !!!



எனக்காக வாழ்ந்தேனா
இல்லை
உனக்காக வாழ்ந்தேனா
என்று தெரியாது !
ஆனால் வாழ்ந்தேன்
என்று மட்டும் தெரியும் !
உதிரமும் சதையும் கொண்ட
உடலாய் மட்டும் இல்லாமல்
உயிரும் என்னுள் இருந்தது !
பழங்கதைகள் தொடங்கி
"
பத்திரமாய் இரு" என்பது வரை
பல நூறு உரையாடல்கள்
இன்று ஊமையாய் சிரிக்கின்றன !
"
நான் " என்ற வார்த்தைக்கு
அர்த்தம் சொல்லி சொல்லி
என் அகராதிகள்
அலுத்துவிட்ட நிலையில்
நினைவுகளை சுமப்பதில்
நிம்மதி காண்கிறேன் !!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments :

Anonymous said...

ada.... ovvoru indianin vazhkai kadhayay evvalovu sirappaga solli irukkindray.

vazhthukkal.

indu said...

Thanks for ur comment

Post a Comment