Fix the Bugs



ஆள் அரவமில்லா காட்டிலே
அத்தனை மரங்களினூடே
தனியே நான் நின்றிருக்க
எங்கிருந்தோ நீ வந்தாய்...!

என் கைப்பிடித்து
உன்னருகில் அமர்த்தி
எவ்வளவோ பேசினாய்...!
என்றும் என்னுடன் இருப்பதாக,
பிரிவில்லா பொழுதுகள் தருவதாக,
எல்லாமே பிடிக்கத்தான் செய்தது...!

உடன் வாழ்வதற்கு நீ காதலனுமில்லை...
அன்பு காட்டுவதற்கு நீ நண்பனுமில்லை...
ஏதுமில்லா உறவில்
எல்லாமுமாக இருப்பதாக சொல்கிறாய் !
இவையன்றி வேறென்ன வேண்டும் எனக்கு...!

உலகமே என் வசமாகி,
உண்மையான அன்பில்
அரைக்கணம் மகிழ்ந்தபோதுதான்
அதிர்ந்தது என் அலைபேசி...
நிகழ்காலம் நினைவுக்கு வந்தது!
project -ல் fix செய்யாத bugs பற்றி
எத்தனையோ கேள்விகள்...

என் வாழ்கையில் உள்ள
bugs - ஐ fix பண்ணத்தெரியாமல்
நான் தவிக்கும் தவிப்பை
என்னவென்று சொல்ல முடியும்...?
மௌனத்தால் பதிலளித்து
பின் கணினிக்குள் புதைந்துவிட்டேன்...!
கனவுகளைப் புதைத்துவிட்டு...!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment