நான்



இன்று தான்
முதன் முதலில் என்னைச்சுற்றி
நெருங்கிய சொந்தங்கள்
கண்ணீர் மல்க எல்லோரும்...!
உறவினர்கள், நண்பர்கள்
வந்து செல்ல
என் குடும்பத்தினர் மட்டும்
பித்துப்பிடிதவர்களாய்...!
ஆறுதல் சொல்ல நினைக்கிறேன்
ஆயினும் முடியவில்லை...!
அமைதியாய் கண்மூடியிருக்கிறேன்...!

கருவில் உதித்து
கவனமாய் வளர்க்கப்பட்ட நாட்கள் !
சிறுமியாய் என் இல்லத்தில்
சுற்றித் திரிந்த நாட்கள் !
பக்கத்துவீட்டு குழந்தைகளுடன்
விளையாடித் திரிந்த நாட்கள் !
பள்ளி விடுமுறைக்காக காத்திருந்து
பூர்வீகம் சென்ற நாட்கள் !
கல்லூரிக்குச் சென்று
நண்பர்களுடன் வாழ்ந்த நாட்கள் !
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்
என் மனக் கண்முன்
பிம்பங்களாய் தோன்றி மறைகிறது !

பின்
வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்தித்து
சலித்துப் போய் ...!
இதோ,
நான் சிரித்து , அழுது , ரசித்து
வாழ்ந்த இல்லத்திலேயே
உயிரற்ற உடலாக ...!
இன்னும் சற்று நேரத்தில்
இங்கிருந்து பிரிந்து
தனிமைத் தீயில்
நானும் கருகிடுவேன்...!
இருந்தும் நானின்றி அழுத
அடுத்த வீட்டு குழந்தைக்கு
ஆறுதல் சொல்கிறார்கள்
நான் கடவுளிடம் சென்றுவிட்டதாய்...!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments :

Hemalatha Gopalakrishnan said...

Nice one indu...

indu said...

Thanks hema:)

guru said...

அருமையான உணர்வு!!

அருள்மொழிவர்மன் said...

gooddd

Post a Comment