காதலும் கற்பனையும்



கொழுந்துவிட்டு எரியும் தீயின் முன் நானும்

அமைதியாய் வந்து அருகில் அமர்ந்து

தோளில் கைப்போடும் நீயும்

சேர்ந்தே ரசிக்கிறோம்

எதிரே எரியும் தீயையும் நம் காதலையும் !


ஆகாய கங்கையாய் கொட்டும் அருவியின் கீழ் நானும்

அதை அறியாமல் அருகில் வந்துவிடும் நீயும்

சேர்ந்தே நனைகிறோம்

உச்சந்தலையில் கொட்டும் நீரிலும் நம் காதலிலும் !



உறக்கம் இல்லாமல் நிலவைப் பார்க்கும் நானும்


அதை உணர்ந்து துணையாய் வந்து நிற்கும் நீயும்

சேர்ந்தே நேசிக்கிறோம்

ஆசிர்வதிக்கும் நட்சத்திரத்தையும் நம்மிடையேயான காதலையும் !


ஏதோ நினைவுகளில் நடந்துவரும் நானும்

எதிரில் வந்து நிற்கும் நீயும்

விலகாமல் பார்க்கிறோம்

மோதிய மூச்சுக்காற்றையும் முன்னே இருக்கும் காதலையும் !


தரையில் தவறி விழுந்த நானும்

தவிப்போடு கைக்கொடுத்த நீயும்

புரிந்தே பிரிகிறோம்

தவறிய நிலத்தையும் நிலைத்துவிட்ட காதலிலும் !


மறைந்துபோன காலமும்

அதில் தொலைந்துபோன நானும்

சேர்ந்தே வாழ்கிறோம்

கலைந்து போகாத கற்பனையிலும்

மறந்து போகாத காதலிலும் !


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8 comments :

நாணல் said...

:) நடக்கட்டும் நடக்கட்டும்...

tryeverythingsudhakar said...

superb one indhu

sutha said...

Keep it up. IS this true or not?

Uvaraj said...

Nice one Indu :-)

Rajalakshmi Subramaniam said...

excellent

indu said...

Thank you all for ur comments... :)

saran said...

:)

Anonymous said...

yarunga adhu? :) sollave illa
by
sudhakar

Post a Comment